internet

img

போலி வாட்ஸ்அப் வெர்ஷன்கள் மூலம் நடைபெறும் விதிமீறல்கள்!

இந்தியாவில் போலி வாட்ஸ்அப் வெர்ஷன்கள் வெறும் 1,000 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், அதில் மக்களவை தேர்தலை ஒட்டி வாட்ஸ்அப் நிறுவனம் விதித்த கட்டுப்பாடுகள் மீறப்படுவதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பில், இந்தியாவில் 1000 ரூபாய்க்கு போலி மென்பொருட்கள் விற்கப்படுகின்றது. சில அரசியல் கட்சியினர், இந்த மென்பொருட்களை பயன்படுத்தி, ஒரு நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே செய்திகளை அனுப்ப முடியும் என்ற வாட்ஸ்அப் கட்டுப்பாடுகளை மீறி, எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் 

குறுஞ்செய்திகளை அனுப்புகின்றனர். மேலும் இந்த போலி வாட்ஸ்அப் வெர்ஷன்களான ’ஜிபிவாட்ஸ்அப்’ மற்றும் ’ஜேடிவாட்ஸ்அப்’, கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடியாது. ஆனால் இவற்றை ஆண்ட்ராய்ட் மொபைல்களில் இண்ஸ்டால் செய்து, உபயோகிக்க முடியும். 

இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுவோரின் செல்போன் எண்கள் முடக்கப்படுமென வாட்ஸ்அப் நிறுவனம் கூறியுள்ள போதிலும், இந்திய அரசியல்கட்சிகள் இதனை பொருட்படுத்துவதில்லை என்றும் ராய்ட்டர்ஸ் கூறியுள்ளது.